rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

6/11/08

உலகின் அதிவேக கணனி உருவாக்கம்

அமரிக்காவானது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் முகமாக உலகிலேயே அதிவேகமாக இயங்கும் கணனியொன்றை வடிவமைத்துள்ளதாக அமரிக்க சக்திவள திணைக்களம் அறிவித்துள்ளது.
இக் கணனியானது ஒரு செக்கனுக்கு 1000 திரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளும் திறண் உடையது.
நியுமெக்சிக்கோவிலுள்ள லொஸ் அலமொஸ் தேசிய ஆய்வு கூடத்திலுள்ள இக்கணனியானது அமரிக்க அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது உலகளாவிய சக்திச் சவால்களுக்குத் தீர்பனவாகவும் அமைவதாக கூறப்படுகின்றது.
உலகில்உள்ள 6 பில்லியன் மக்கள் சாதாரண கணிப்பானைப் பயன்படுத்தி வருடத்திலுள்ள அனைத்து நாட்களிலும்24 மணிநேரம் உளைத்து 46 வருடங்களில் மேற்கொள்ளும் கணிப்பீட்டை இந்த "ரோட்ரன்னர்" கணனி ஒரு நாளில் நிறைவேற்றும் வல்லமையைக் கொண்டு விளங்குகிறது. அப் அப்பா தலையை சுற்றுகிறது.


6/10/08

வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்

இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.
பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.
பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.
ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.
வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.
நானும் பாருங்கோ இப்படித்தான்

நாசாவில் ஆர்&டி மையம் அமைக்கிறது கூகிள்

பிரபல தேடுபொறி (Search Engine) தளமான கூகிள் இணையத்தை நடத்தி வரும் கூகிள் நிறுவனம், நாசாவின் அலுவலகத்தில் தனது புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை அமைக்க உள்ளது.
இதற்காக அமெரிக்காவின் மவுண்டன் வியூ பகுதியில் உள்ள நாசாவின் ஏமீஸ் ஆய்வு மையத்தில் உள்ள 42.2 ஏக்கர் இடத்தை அடுத்த 90 ஆண்டுகளுக்கு கூகிள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது.
அந்த இடத்திற்கு வாடகையாக கூகிள் சார்பில் 3.66 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், வரும் 2013ம் ஆண்டு இந்த ஆர்&டி மையம் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 12 மில்லியன் சதுரடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மையத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6/3/08

டொஸிபா வின் தென்கிழக்காசிய குறியீட்டு தூதுவர் - New Ambassador For Toshiba

டொஸிபாஇ பிரபல இந்தியத் திலையுலக நட்சத்திரம் வித்தியாபாலனை தனது தென் கிழக்காசிய குறியீட்டு தூதுவராக தெரிவு செய்துள்ளது.
தென் கிழக்காசிய பிராந்தியத்தில் டொஸிபா வின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் பிரபல்யப்படுத்துவவதற்கு இந்த நியமனம் பெரிதும் உதவும் என்பது டொஸிபாவின் நம்பிகக்கையாகும்.
டொஸிபா இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய படைப்புக்களைச் சந்தைக்கு அறிமுகப்பபடுத்தியுள்ளது. வித்தியா பாலன் இப் பிராந்தியத்தில் ஏராளமான ரசிகர்களையும் ஆதரவாளார்களையும் கொண்டுள்ளார் என்பதால் அவர் எம்முடன் இணைந்திருப்பது எமது உற்பத்திப் பொருட்களை பாவனையாளர்கள் மத்தியில் சந்தைப்படுத்த பெரும் உந்துசக்தியாக அமையும் என்று டொஸிபா சிங்கப்பூர் பிறைவேட் லிமிட்டெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் மேரி லிம் தெரிவித்தார்.

5/23/08

கணனி உதிரிகளை அழிக்கும் முறை -burnout on computer hardware

வன்பொருட்களை அழிக்க இப்படியும் ஒரு வழிவகையும் உண்டு.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...
ஆனால் செலவு கொஞ்சம் அதிகமாகும் (ரயர் தேய்வடையும்)



5/11/08

புது கணனி வடிவமைப்பு

எங்களுடைய ஊரில் "தீனா" எனும் பெயருடைய விஞ்ஞானி இருக்கிறார்.எப்பெழுதும் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.இப்படி செய்ததில் ஒன்றுதான் இது.
ASUS தாய்ப்பலகை பெட்டியில் வடிவமைத்துள்ளார்.காசும் மிச்சம்தான் பாருங்கோ.cooling fan கூட இணைத்துள்ளார்.வன்தட்டை சரியாக வைக்க முடியவில்லை என்று விடுப்பிற்கு பேட்டி அளிக்கும்போது ஆதங்கப்பட்டார்.உங்களுக்கு தெரிந்த யோசனையை விடுப்பினூடக தெரிவியுங்கோ.




4/11/08

அதிவேக மெமரி சிப் தயார்

செல்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டிற்கான அதிவேக ஒரு ஜிகாபைட் மெமரி சிப்-ஐ தயாரித்திருப்பதாக தென் கொரியாவின் ஹைனிக்ஸ் செமிகண்டக்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் 2-வது மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹைனிக்ஸின் இந்த சிப் ஆனது, விநாடிக்கும் சுமார் 800 மெகாபைட் டேட்டாக்களை திரட்டும் என்றும், தற்போது சந்தையில் கிடைக்கும் சிப்களை விட புதிய சிப் டேட்டாவை பெறும் திறன் அதிவேகமானது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மொபைல் பயன்பாடுகளின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த சிப் இருக்கும் என்றும், வேகமான செயல்பாட்டு திறனுக்காகவும், அதிவேக மெமரிக்காகவும் இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சிப்களை அதிகளவில் ஹைனிக்ஸ் தயாரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

3/11/08

ஆப்பிள் ஐபோன் மூலம் மேம்படுத்தப்பட்ட ஈ-மெயில்

ஆப்பிள் இங் நிறுவனத்தின் ஐபோன் மூலம் பாதுகாப்பான-மேம்படுத்தப்பட்ட வகையிலான மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி விரைவில் பயனர்களுக்கு கிடைக்க உள்ளது.
மிகவும் பிரபலம் அடைந்த ஆப்பிள் இங், ஐபோனில், மின்னஞ்சல் அனுப்புவதில் சில குறைபாடுகள் இருந்து வந்தன.
இதற்கிடையே ஆப்பிள் இங்-ன் ஐபோனில் அடுத்தகட்ட சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனுடன் மென்பொருள் பரிமாற்ற முயற்சியில் ஆப்பிள் இங் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் வர்த்தகப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான மின்னஞ்சல்களை ஐபோன் மூலமாகவே அனுப்ப முடியும்.
என்றாலும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் எப்போது ஐபோனில் சேர்க்கப்படும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மோஷன் லிமிடெட்டின் பிளாக்பெர்ரி மற்றும் பாம் நிறுவனத்தின் ட்ரியோ ஸ்மார்ட் போன் ஆராய்ச்சிக்குப் போட்டியாக அமையும்.