rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

4/11/08

அதிவேக மெமரி சிப் தயார்

செல்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டிற்கான அதிவேக ஒரு ஜிகாபைட் மெமரி சிப்-ஐ தயாரித்திருப்பதாக தென் கொரியாவின் ஹைனிக்ஸ் செமிகண்டக்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் 2-வது மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹைனிக்ஸின் இந்த சிப் ஆனது, விநாடிக்கும் சுமார் 800 மெகாபைட் டேட்டாக்களை திரட்டும் என்றும், தற்போது சந்தையில் கிடைக்கும் சிப்களை விட புதிய சிப் டேட்டாவை பெறும் திறன் அதிவேகமானது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மொபைல் பயன்பாடுகளின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த சிப் இருக்கும் என்றும், வேகமான செயல்பாட்டு திறனுக்காகவும், அதிவேக மெமரிக்காகவும் இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சிப்களை அதிகளவில் ஹைனிக்ஸ் தயாரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

3/11/08

ஆப்பிள் ஐபோன் மூலம் மேம்படுத்தப்பட்ட ஈ-மெயில்

ஆப்பிள் இங் நிறுவனத்தின் ஐபோன் மூலம் பாதுகாப்பான-மேம்படுத்தப்பட்ட வகையிலான மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி விரைவில் பயனர்களுக்கு கிடைக்க உள்ளது.
மிகவும் பிரபலம் அடைந்த ஆப்பிள் இங், ஐபோனில், மின்னஞ்சல் அனுப்புவதில் சில குறைபாடுகள் இருந்து வந்தன.
இதற்கிடையே ஆப்பிள் இங்-ன் ஐபோனில் அடுத்தகட்ட சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனுடன் மென்பொருள் பரிமாற்ற முயற்சியில் ஆப்பிள் இங் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் வர்த்தகப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான மின்னஞ்சல்களை ஐபோன் மூலமாகவே அனுப்ப முடியும்.
என்றாலும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் எப்போது ஐபோனில் சேர்க்கப்படும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மோஷன் லிமிடெட்டின் பிளாக்பெர்ரி மற்றும் பாம் நிறுவனத்தின் ட்ரியோ ஸ்மார்ட் போன் ஆராய்ச்சிக்குப் போட்டியாக அமையும்.

2/19/08

2020ல் மனித அறிவுக்கு இணையான கணினி

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடந்த அறிவியில் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்த அவர், 'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.
தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.
மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


1/21/08

கிரிக்கற்








நண்பர் இ-மெயிலில் அனுப்பியிருந்தார் அது உங்களுக்கும்


12/29/07

அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்

கால்சென்டர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் நிலையில் கோளாறுகள் பெருகி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கால்சென்டர்கள் தவிர மென்பொருள் தயாரிப்புத் துறை, மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் இன்னபிற அவுட்சோர்சிங் துறைகளில் ஆண்கள், பெண்கள் உட்பட 1.6 மில்லியன் இளம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
20லிருந்து 30 வயதுக்குள் மட்டுமே இருக்கும் இந்த ஊழியர்கள் மற்ற துறையில் இதே வயதில் பணியாற்றும் ஊழியர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கு தூக்கமின்மை, இருதய நோய், மன உளைச்சல் ஆகிய தொந்தரவுகள் அதிகம் ஏற்படுகிறது. இதோடு மேலும் முக்கியமாக குடும்பத்துடன் இவர்களால் ஒட்டுதல் ஏற்படுத்தி கொள்ள முடிவதில்லை. இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுவதாக பல சமூகவியலாளர்கள் கூறி வருகின்றனர்.
சக்தி வாய்ந்த ஒரு பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதில், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் பெருகும் வருவாய் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஊழியர்களின் ஆரோக்கியம் இந்த துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டில் இருதய நோய், வாதம், நீரிழிவு ஆகிய நோய்களால் மட்டுமே உற்பத்தித் திறன் 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியம் குறித்த இத்தகைய போக்கு தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் திறன் இழப்பு 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு உயரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென்றே பிரத்யேகமான மருத்துவக் கொள்கையை அறிமுகம் செய்யவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமர்ந்தபடியே பணியாற்றுவதாலும், பணிச்சுமை உள்ளிட்ட பணியிட சூழல்களால் மன அழுத்தமும், இருதய நோயும், ஜீரணக் கோளாறுகளும், உடல் எடை கூடுதலும் ஏற்படுகின்றன.

12/13/07