rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

12/29/07

அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்

கால்சென்டர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் நிலையில் கோளாறுகள் பெருகி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கால்சென்டர்கள் தவிர மென்பொருள் தயாரிப்புத் துறை, மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் இன்னபிற அவுட்சோர்சிங் துறைகளில் ஆண்கள், பெண்கள் உட்பட 1.6 மில்லியன் இளம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
20லிருந்து 30 வயதுக்குள் மட்டுமே இருக்கும் இந்த ஊழியர்கள் மற்ற துறையில் இதே வயதில் பணியாற்றும் ஊழியர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கு தூக்கமின்மை, இருதய நோய், மன உளைச்சல் ஆகிய தொந்தரவுகள் அதிகம் ஏற்படுகிறது. இதோடு மேலும் முக்கியமாக குடும்பத்துடன் இவர்களால் ஒட்டுதல் ஏற்படுத்தி கொள்ள முடிவதில்லை. இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுவதாக பல சமூகவியலாளர்கள் கூறி வருகின்றனர்.
சக்தி வாய்ந்த ஒரு பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதில், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் பெருகும் வருவாய் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஊழியர்களின் ஆரோக்கியம் இந்த துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டில் இருதய நோய், வாதம், நீரிழிவு ஆகிய நோய்களால் மட்டுமே உற்பத்தித் திறன் 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியம் குறித்த இத்தகைய போக்கு தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் திறன் இழப்பு 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு உயரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென்றே பிரத்யேகமான மருத்துவக் கொள்கையை அறிமுகம் செய்யவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமர்ந்தபடியே பணியாற்றுவதாலும், பணிச்சுமை உள்ளிட்ட பணியிட சூழல்களால் மன அழுத்தமும், இருதய நோயும், ஜீரணக் கோளாறுகளும், உடல் எடை கூடுதலும் ஏற்படுகின்றன.

No comments: