rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

9/18/07

ஆரக்கிள் நிறுவனத்தின் சர்வதேச போட்டி

ஆரக்கிள் கல்வி பவுண்டேஷன் (ஓஈஎஃப்) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் `திங் குவெஸ்ட் இண்டர்நேஷனல் 2008' போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களும், அவர்களின் பயிற்சியாளர்கள், ஆசிரியர்களும் இந்த போட்டியில் குழுவாகப் பங்கேற்று, கல்வி தொடர்பான இணைய தளத்தை உருவாக்கலாம் என்று ஆரக்கிள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்கள் தங்களின் இணைய தளத்தை 21ம் நூற்றாண்டில் திறமைகளுடன் குழுத்திறனாக சிற்பான எண்ண்ங்களுடனும், தாமாகவே முன்வந்து பிரச்சினைகளை தீர்க்கும் தொழில்நுட்ப திறமைகளை மேம்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
திங் குவெஸ்ட் என்பது ஒரு பிரத்யேக கல்வித் திட்டமாகவும், மாணவர்களை தொழில்நுட்ப ரீதியில் ஓருங்கிணைத்து அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் நடத்தப்படுவதாகவும் ஆரக்கிள் உயர் அதிகாரி கிளாரே டோலன் தெரிவித்துள்ளார்.

No comments: